சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். தற்போது ஆமீர்கான் உடன் ‛லால் சிங் சத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து நிறைய விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அக் ஷயை திரிதியை முன்னிட்டு அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.
விளம்பரத்தில் கரீனா கபூர் நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்படுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கரீனாவின் இந்த செயல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். ‛‛ஒரு திருமணமான இந்து பெண் நெற்றியில் பொட்டு வைக்காமல் இப்படி தான் பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பதா''. ‛‛இதுபோன்ற பண்டிகை காலங்களில் இந்து பெண்கள் அதிலும் திருமணமான பெண்கள் எந்த மாதிரியாக இருப்பார்கள் என்பது கூட கரீனாவிற்கு தெரியாதா, இந்து தர்மம் என்னவென்று அவருக்கு தெரியாதா''. ‛‛திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது என்பது முக்கியமான விஷயம்'' என இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதோடு கரீனாவை புறக்கணிக்க வேண்டும். பொட்டு இல்லையென்றால் பிசினஸூம் இல்லை என டிரெண்ட்டும் செய்தனர்.