துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' |
பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். தற்போது ஆமீர்கான் உடன் ‛லால் சிங் சத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து நிறைய விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அக் ஷயை திரிதியை முன்னிட்டு அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.
விளம்பரத்தில் கரீனா கபூர் நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்படுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கரீனாவின் இந்த செயல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். ‛‛ஒரு திருமணமான இந்து பெண் நெற்றியில் பொட்டு வைக்காமல் இப்படி தான் பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பதா''. ‛‛இதுபோன்ற பண்டிகை காலங்களில் இந்து பெண்கள் அதிலும் திருமணமான பெண்கள் எந்த மாதிரியாக இருப்பார்கள் என்பது கூட கரீனாவிற்கு தெரியாதா, இந்து தர்மம் என்னவென்று அவருக்கு தெரியாதா''. ‛‛திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது என்பது முக்கியமான விஷயம்'' என இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதோடு கரீனாவை புறக்கணிக்க வேண்டும். பொட்டு இல்லையென்றால் பிசினஸூம் இல்லை என டிரெண்ட்டும் செய்தனர்.