ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். தற்போது ஆமீர்கான் உடன் ‛லால் சிங் சத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து நிறைய விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அக் ஷயை திரிதியை முன்னிட்டு அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.
விளம்பரத்தில் கரீனா கபூர் நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்படுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கரீனாவின் இந்த செயல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். ‛‛ஒரு திருமணமான இந்து பெண் நெற்றியில் பொட்டு வைக்காமல் இப்படி தான் பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பதா''. ‛‛இதுபோன்ற பண்டிகை காலங்களில் இந்து பெண்கள் அதிலும் திருமணமான பெண்கள் எந்த மாதிரியாக இருப்பார்கள் என்பது கூட கரீனாவிற்கு தெரியாதா, இந்து தர்மம் என்னவென்று அவருக்கு தெரியாதா''. ‛‛திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது என்பது முக்கியமான விஷயம்'' என இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதோடு கரீனாவை புறக்கணிக்க வேண்டும். பொட்டு இல்லையென்றால் பிசினஸூம் இல்லை என டிரெண்ட்டும் செய்தனர்.