காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த வருடம் திடீரென திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் திருமணம் முடித்த கையோடு மீண்டும் பிசியாக நடிக்க துவங்கி விட்டார் யாமி கவுதம். அந்தவகையில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அவர் நடித்துள்ள தேஸ்வி என்கிற படம் வரும் ஏப்-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சிறைக்கைதிகளை மையப்படுத்தி சென்ட்ரல் ஜெயிலை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயில் அதிகாரியாக யாமி கவுதம் நடித்துள்ளார். அதனால் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தப்படத்தை ஆக்ராவில் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். மேலும் அவர்களுடன் யாமி கவுதம், அபிஷேக் பச்சன், படத்தில் நடித்துள்ள இன்னொரு நடிகையான நிம்ரத் கவுர் ஆகியோரும் இணைந்து படம் பார்த்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.