'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த வருடம் திடீரென திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் திருமணம் முடித்த கையோடு மீண்டும் பிசியாக நடிக்க துவங்கி விட்டார் யாமி கவுதம். அந்தவகையில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அவர் நடித்துள்ள தேஸ்வி என்கிற படம் வரும் ஏப்-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சிறைக்கைதிகளை மையப்படுத்தி சென்ட்ரல் ஜெயிலை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயில் அதிகாரியாக யாமி கவுதம் நடித்துள்ளார். அதனால் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தப்படத்தை ஆக்ராவில் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். மேலும் அவர்களுடன் யாமி கவுதம், அபிஷேக் பச்சன், படத்தில் நடித்துள்ள இன்னொரு நடிகையான நிம்ரத் கவுர் ஆகியோரும் இணைந்து படம் பார்த்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.