சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். 2006ம் ஆண்டு மிஸ்ஸ்ரீலங்கா பட்டம் வென்றதும் மாடலிங் துறையில் முன்னணிக்கு வந்தார். அதன்பிறகு பாலிவுட் நடிகை ஆனார். மர்டர் 2, ரேஸ் 2, ஹவுஸ்புல் 3, கிக், ராய், சாஹோ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது விக்ராந்த் ராணா, கிர்குஸ், ராம்சேட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இலங்கையில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள், விலைவாசி உயர்வு, மக்கள் போராட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : ‛‛எனது நாட்டு மக்களை பார்க்கும்போது மனம் கஷ்டப்படுகிறது. இலங்கை குடிமகளாக இருப்பதால் இதையெல்லாம் பார்க்கும்போது மனம் வருத்தமாக இருக்கிறது. தற்போதைய சூழல்கள் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என் நாட்டுக்காக, மக்களுக்காக 2 நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தால் கூட போதும். அதனால் நிறைய பலன் கிடைக்கும்'' என்கிறார்.