ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழில் விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் மீது ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடத்தில் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டிக்கு மும்பை நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறது.
அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டியின் தந்தை, பர்கத் அம்ரா என்பவரிடத்தில் 21 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். அதையடுத்து தந்தை வாங்கிய கடனை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருடன் கேட்ட போது, கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மும்பை நீதிமன்றத்தில் அதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிப்ரவரி 28ஆம் தேதி ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் மற்றும் தங்கையை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளார்.




