காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு |
தமிழில் விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் மீது ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடத்தில் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டிக்கு மும்பை நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறது.
அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டியின் தந்தை, பர்கத் அம்ரா என்பவரிடத்தில் 21 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். அதையடுத்து தந்தை வாங்கிய கடனை ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருடன் கேட்ட போது, கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மும்பை நீதிமன்றத்தில் அதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிப்ரவரி 28ஆம் தேதி ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் மற்றும் தங்கையை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளார்.