பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
முன்னணி பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி. பாலிவுட் படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வென்றவர். தற்போது ஷோ ஸ்டாப்பர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வேதா திவாரி. எனது உள்ளாடைகளை கடவுள்தான் அளவெடுத்து வருகிறார் என்று கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய பிரதேச அரசு ஸ்வேதாவின் பேச்சு குறித்து 24 மணிநேரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் கமிஷனுக்கு உத்தரவிட்டது. விஷயம் பெரிதாகவே இப்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய கருத்து யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும்வகையில் பேசப்படவில்லை. என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள என் போன்ற ஒருத்தி இதுபோன்ற கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவது என்பது நடக்காத ஒன்று. மேலும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. என்னுடைய செயல்பாடுகளோ வார்த்தைகளோ யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதுகுறித்து தான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.