பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
மலையாள திரையுலகில் நூறு படங்களில் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜூக்கு ஹிந்தி திரையுலகமும் ஒன்றும் புதிதல்ல. இதுவரை ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆனார். அவரை வைத்தே சமீபத்தில் ப்ரோ டாடி என்கிற தனது இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இந்த அனுபவங்களை ஹிந்தியில் முதலீடு செய்யும் விதமாக தற்போது ஹிந்தியில் ஒரு வெப்சீரிஸில் நடிப்பதோடு அதை இயக்கும் வாய்ப்பும் பிரித்விராஜை தேடிவந்துள்ளது.. பிஸ்கட் கிங் ராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ்உருவாக இருக்கிறதாம். அதேசமயம் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதாலும் கதையின் முக்கிய கதாபாத்திரம் கேரளாவை சேர்ந்தவர் என்பதாலும் மலையாளத்திலும் இந்த வெப்சீரிஸ் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.