ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? |

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போதிருந்தே துவங்கிவிட்டன. இந்த நிலையில் மும்பை சென்ற இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது நடித்து வரும் படப்பிடிப்பு தளத்திற்கு நேரிலேயே சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படும்போது, இந்தியாவில் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருக்கின்ற இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கானை நேரில் வந்து சந்தித்து இருப்பதை பார்க்கும்போது அவர்கள் இருவரும் அடுத்த படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்பது போன்றுதான் தோற்றம் ஏற்படும். ஆனால் உண்மை அதுவல்ல. ராஜமவுலியின் படம் பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால், பாலிவுட் ரிலீஸின்போது புரோமோஷன் விஷயத்திலும் படத்தை ரிலீஸ் செய்வதிலும் அவரது உதவியை நாடி வந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது என்று கூறுகிறார்கள், விரைவில் இது குறித்த தகவல் ஏதாவது வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.