'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் |

இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ‛இந்திய திரைப்பட ஆளுமை' விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2021ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுபவர்களின் பெயர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த 18-ம் தேதி அறிவித்தார். அதில், பிரபல பாலிவுட் நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் பிரபல பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், கோவாவில் 52வது சர்வதேச திரைப்பட விழா இன்று (நவ.,21) துவங்கியது. இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இதன் துவக்க விழாவில் நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகிய இருவருக்கும் ‛இந்திய திரைப்பட ஆளுமை விருது' வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இயக்குனர் கரண் ஜோகர், நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.