தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

கேரளாவில் வருடம் தோறும் கேரளா சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது 30வது கேரளா திரைப்பட திருவிழா துவங்கியுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது பெற்ற நடிகை லிஜோமோல் ஜோஸ் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியின் பிரதிநிதிக்கான முதல் கவுரவத்தை பெற்றுக் கொண்டார்.
'ஜெய் பீம்' படத்திற்காக சிறந்த நடிகை என பல்வேறு விருதுகளை பெற்ற இவர் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'நடன்ன சம்பவம்' என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குணச்சித்ர நடிகைக்கான கேரளா அரசு விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு இந்த கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பிரதிநிதியாக கவுரவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.