தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

கேரளாவில் வருடம் தோறும் கேரளா சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது 30வது கேரளா திரைப்பட திருவிழா துவங்கியுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது பெற்ற நடிகை லிஜோமோல் ஜோஸ் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியின் பிரதிநிதிக்கான முதல் கவுரவத்தை பெற்றுக் கொண்டார்.
'ஜெய் பீம்' படத்திற்காக சிறந்த நடிகை என பல்வேறு விருதுகளை பெற்ற இவர் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'நடன்ன சம்பவம்' என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குணச்சித்ர நடிகைக்கான கேரளா அரசு விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு இந்த கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பிரதிநிதியாக கவுரவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.