சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கேரளாவில் வருடம் தோறும் கேரளா சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது 30வது கேரளா திரைப்பட திருவிழா துவங்கியுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது பெற்ற நடிகை லிஜோமோல் ஜோஸ் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியின் பிரதிநிதிக்கான முதல் கவுரவத்தை பெற்றுக் கொண்டார்.
'ஜெய் பீம்' படத்திற்காக சிறந்த நடிகை என பல்வேறு விருதுகளை பெற்ற இவர் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'நடன்ன சம்பவம்' என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குணச்சித்ர நடிகைக்கான கேரளா அரசு விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு இந்த கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பிரதிநிதியாக கவுரவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.




