9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

கடந்த 2005ல் ஹிந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பண்டி அவுர் பப்ளி. 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த அபிஷேக் பச்சனுக்கு பதிலாக இந்த இரண்டாவது பாகத்தில் சைப் அலிகான் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த ஹீரோ மாற்றத்திற்கு காரணம் என்று பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே படத்தின் தயாரிப்பாளர் தூம் 3 படத்தை தயாரித்தபோது அதில் நடிப்பது தொடர்பாக அபிஷேக் பச்சனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது தற்போது வரை தீராததால் இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் அபிஷேக் பச்சனுக்கு பதிலாக சைப்பை மாற்றச் சொல்லி விட்டாராம் பட தயாரிப்பாளர்.