ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தொலைக்காட்சி பிரபலமான ஜாக்குலின் விஜய் டிவியில் தேன்மொழி பி.ஏ என்கிற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பின் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு முடிவு செய்திருந்தனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவும் சீரியலுக்கான ஸ்லாட் கிடைக்காது என்பதால், தொலைக்காட்சி நிறுவனமும் இந்த தொடரை முடித்து விடும் என்றே எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இதனால் சீரியல் முடிவை நோக்கி செல்லாமல் நீட்டிக்கப்படுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக ஜாக்குலின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.