‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல நடிகரான பப்லு பிருத்விராஜ் தனது காதலி ஷீத்தலுடனான உறவிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த செய்தி தான் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது ஸ்டைலில் கிசுகிசுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பப்லு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். அந்த பேட்டியில் பப்லு பேசியதாவது, 'பயில்வானுக்கு வேறு வேலை இல்லை. அடுத்தவர்களை தரக்குறைவாக பேசினால் தான் அவருக்கு சோறு. அசிங்கமானவர்களால் இப்படி அசிங்கமாக தான் பேச முடியும். காசுக்காக இப்படி அசிங்கமாக பேசலாமா? உன் அம்மாவையோ தங்கையையோ இப்படி ஒருவர் பேசினால் உனக்கு எவ்வளவு வலிக்கும்?' என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.