ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். அதற்காக எந்த ரிஸ்கையும் எடுக்கத் தயராக இருக்கும் சைத்ரா, முன்னதாக யாரடி நீ மோகினி தொடரிலும் பேயுடன் சண்டையிடும் காட்சிக்காக கயிற்றில் தொங்கிய படி ரிஸ்க்கான சண்டை காட்சியை சைத்ரா செய்திருந்தார். தற்போது கயல் தொடரின் காட்சிக்காக உண்மையாகவே சைத்ரா ரெட்டி நாள் முழுவதும் கழுத்தில் சுருக்கு கயிறுடன் ஐஸ்கட்டி மீது நின்று நடித்துக் கொடுத்துள்ளார். 2 நிமிடம் ஐஸ்கட்டி தொடர்ந்து கையில் பட்டாலே நம்மில் பலரால் தாங்க முடியாது. ரத்த ஓட்டம் நின்றுவிடும். ஆனால், ஷூட்டிங்கிறாக தொடர்ந்து ஐஸ்கட்டி மேல் நின்று சைத்ரா ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த காட்சியின் மேக்கிங் வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் நடிப்பின் மீதான சைத்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.