ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா | 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்! | தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்! | தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில் | 'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' |

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். அதற்காக எந்த ரிஸ்கையும் எடுக்கத் தயராக இருக்கும் சைத்ரா, முன்னதாக யாரடி நீ மோகினி தொடரிலும் பேயுடன் சண்டையிடும் காட்சிக்காக கயிற்றில் தொங்கிய படி ரிஸ்க்கான சண்டை காட்சியை சைத்ரா செய்திருந்தார். தற்போது கயல் தொடரின் காட்சிக்காக உண்மையாகவே சைத்ரா ரெட்டி நாள் முழுவதும் கழுத்தில் சுருக்கு கயிறுடன் ஐஸ்கட்டி மீது நின்று நடித்துக் கொடுத்துள்ளார். 2 நிமிடம் ஐஸ்கட்டி தொடர்ந்து கையில் பட்டாலே நம்மில் பலரால் தாங்க முடியாது. ரத்த ஓட்டம் நின்றுவிடும். ஆனால், ஷூட்டிங்கிறாக தொடர்ந்து ஐஸ்கட்டி மேல் நின்று சைத்ரா ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த காட்சியின் மேக்கிங் வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் நடிப்பின் மீதான சைத்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.




