'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரச்சிதா சினிமாவில் என்ட்ரி கொடுத்ததையடுத்து சீரியலில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
விஜய் டிவி சீரியல்களின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான முகமாக இருந்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசன்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா, தற்போது 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீசன் 2-விலும் கலக்கி வந்தார்.
இந்நிலையில் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கன்னட படத்தின் மூலம் கிடைத்தது. இதனையடுத்து அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்திகள் சில மாதங்களுக்கு முன் பரவலாக வலம் வந்தன. ஆனால், அப்போது அதை மறுத்த ரச்சிதா, 'போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆன பாத்துக்கலாம். சீரியலை விட்டு போறேன் போறேன்னு சொல்லி சொல்லி நீங்களே போக வைச்சுடாதீங்க' என கிண்டலாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் விஜய் டிவிக்கு பை சொல்லிவிட்டு சினிமாவிற்குள் மொத்தமாக நுழைகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வின் மஹாலெட்சுமி கெட்டப்பில் போட்டோவை வெளியிட்டு கேப்ஷனாக 'பை மஹா' என பதிவிட்டுள்ளார். ரச்சிதா சின்னத்திரையை விட்டு முழுதாக விலகியுள்ள செய்தி சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




