ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் போலீசாக நடித்த ரஜினி, தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு கிராமத்து கதையில் ரஜினி நடித்துள்ள இந்த படம் விவசாய குடும்பத்தில் நடக்கும் பிரச்னையை மையப்படுத்தி உருவாகியிருப்பதால் விஸ்வாசம் படத்தைப்போலவே இந்தபடமும் மெகா ஹிட் அடிக்கும் என்று தனது எதிர்பார்பபை வெளிப்படுத்தி வருகிறார் சிறுத்தை சிவா.
இந்த நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த வெளியாக உள்ள நிலையில், அதையடுத்து ரஜினி நடிக்கும் 170வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்விகள எழுந்துள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோர்களின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கப்போவதாக இன்னொரு தகவல் போயஸ் கார்டன் வட்டாரங்களில் கசிந்துள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த காலா படத்தை தயாரித்த தனுஷ், இந்த படத்தை இயக்கப்போகிறாராம். ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் இப்படத்தை தயாரிக்கிறார்களாம்.
ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி என்ற படத்தை ஹிட் படமாக கொடுத்து டைரக்டராகவும் தன்னை தனுஷ் நிரூபித்திரு ப்பதால் இந்த வாய்ப்பினை அவருக்கு வழங்குகிறாராம் ரஜினி. இப்படம் குறித்த தகவல்கள் அண்ணாத்த ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.