பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தற்போது ஒரே சமயத்தில் நான்கு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது அந்த டிவி நிறுவனம். அதில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய நான்கு படங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தை எட்டியுள்ளன.
அந்த வகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்பதும் கிட்டத்தட்ட ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்தநிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 24ஆம் தேதி அன்றும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை காதலர் தின கொண்டாட்டமாக பிப்ரவரி 11ம் தேதியன்றும் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த நான்கு படங்களுமே பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை குறிவைத்து ரிலீஸ் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.