ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. இந்த படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளன. முதலாவதாக கோடியில் ஒருவன் படம் செப்., 17ல் ரிலீஸாகிறது. இந்நிலையில் தான் இயக்கும் தனது முதல் படமான பிச்சைக்காரன் 2 படத்தை நேற்று சென்னையில் தொடங்கினார் விஜய் ஆண்டனி. இவரே இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் செய்கிறார்.
2015ல் சசி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை படம் பிச்சைக்காரன். இப்படத்தை தெலுங்கிலும் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியிட்டனர். அப்படம் தமிழை விட அதிகப்படியாக வசூலித்து தெலுங்கு சினிமாவில் விஜய் ஆண்டனியை பிரபலப்படுத்தியது. அதனால் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு ரசிகர்களையும் கருத்தில் கொண்டு பிச்சைக்காரன் 2 படத்தை உருவாக்க உள்ளார் விஜய் ஆண்டனி. அடுத்தபடியாக ஐதராபாத்திற்கும் சென்று முக்கியவத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கப் போகிறாராம்.