ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு ஹீரோயின்கள் வந்த காலம் மாறி இப்போது சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயின்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் சமீபத்திய உதாரணங்கள்.
இவர்கள் வரிசையில் இப்போது சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா மகாலட்சுமியும் ஹீரோயின் ஆகிறார். பிரிவோம் சந்திப்போம் தொடரில் அறிமுகமான இவர் அதன் பிறகு இளவரசி, நாச்சியார், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சினியர் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே பாரிஜாதா என்ற கன்னட படத்திலும், உப்புகருவாடு என்ற தமிழ் படத்திலும் இரண்டாவது நாயகியாக நடித்தவர் , இப்போது கன்னட படம் ஒன்றின் மூலம் ஹீரோயின் ஆகிறார்.