‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஷங்கர். ரஜினிகாந்தை வைத்து பல கோடிகளில் உருவான '2.0' படம் மூலம் இந்திய அளவிலும் பேசப்படுவோம் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை. அடுத்து 'இந்தியன் 2' படத்தில் அந்த இந்திய சாதனையைச் செய்துவிடலாம் என எதிர்பார்த்தார். கடைசியில் முக்கால்வாசி படத்தை முடித்தபின் படத்தை அப்படியே விட்டுவிட்டு தெலுங்குப் பக்கம் போய்விட்டார்.
தெலுங்கில் ராம் சரண் நடிக்க பான்-இந்தியா வெளியீடாக புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். 'ஆர்சி 15' என்று அழைக்கப்படும் அப்படத்திற்கு தமன் இசையமைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்தவர் தமன். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். முதன் முதலாக ஷங்கர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ஷங்கர் இதுவரையிலும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோரைத் தான் தனது படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிய வைத்துள்ளார். இப்போது அவர்களை விட்டு விலகி ஒரு பான்-இந்தியா படத்திற்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது ரஹ்மான், ஹாரிஸ், அனிருத் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.