ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு. தாமரைக்கு அடுத்து அதிக பாடல்களை எழுதியவர் தேன்மொழி தாஸ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கண்களால் கைது செய், அடுத்த சாட்டை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியவர்.
இசையில்லாத இலையில்லை, அநாதி காலம், ஒளியறியாக் காட்டுக்குள், நிராசைகளின் ஆதித்தாய் , காயா, வல்லபி, உள்ளிட்ட பல கவிதை நூல்களை எழுதியிருக்கிறார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேன்மொழி தாஸ் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சையில் உள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள இயக்குனர் களஞ்சியம், அவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.