காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமைகளில் ஒருவரான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீனும், இணைந்து முகம்மது நபிகளை புகழும் ஒரு தனித்துவ பாடலை பாடியுள்ளார்கள். இந்த பாடல் இன்று(மே 14) ரம்ஜான் திருநாளில் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
தலா அல் பத்ரு அலைனா (TALA AL BADRU ALAYNA) எனும் இப்பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை, போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை பாடலை அடிப்படையாக கொண்டது. மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் வருகைபுரிந்த போது, மதீனா மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல் இதுவாகும்.
யுவன் சங்கர் ராஜா கூறுகையில், இத்தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். தலா அல் பத்ரு அலைனா போன்ற தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. மேலும் எனது சகோதரர் அமீன் அவர்களுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார்.
அமீன் கூறியதாவது : நபிகளை போற்றும் தெய்வீகமான பாடலை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதி அருளட்டும் என்றார்.
“தலா அல் பத்ரு அலைனா” பாடலின் முழு அர்த்தத்தை தமிழ் மொழியில் தந்துள்ளார் அப்துல் பசீத் புகாரி. பாடலுக்கான இசை வடிவத்தை உருவாக்கி, அமீன் உடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. முழுமையான தனித்துவ பாடலாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் மூலம் வரும் அனைத்து வருமானமும், தேவையுள்ள ஏழை, எளியோர்ருக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பாடலின் முழு வீடியோ வடிவம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.




