ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு படம் திரைக்கு வருவதால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்தபோதும் சரியான பாதுகாப்புடன் தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினி. அவருக்கான காட்சிகள் இன்னும் சில தினங்களில் படமாக்கப்பட்டுவிடும் என்பதால் அதையடுத்து சென்னை திரும்புகிறார்.
மேலும், கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் புதிய படங்களை நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, தற்போது கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் கதை கேட்டு வைத்திருப்பவர், முதலாவதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் ஜூலை மாதத்திற்கு பிறகு நடிப்பார் என்றும் போயஸ்கார்டன் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.




