சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரணும் விவேக்கின் மரணம் குறித்து ஒரு உருக்கமான கவிதை வெளியிட்டுள்ளார்.
அதில்,
தம்பி விவேக்
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்தபோதெல்லாம் அன்பைத் தேடிப் போனாய், அறிவைத் தேடிப் போனாய், பண்பைத் தேடிப் போனாய் எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாய் இருந்தது.
இப்போது தாயைத் தேடிப் போனாயோ
தனயனைத் தேடிப் போனாயோ
யாரை நம்பி போனாயோ
எதையும் என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை
மனம் தவிக்கிறது...
எதை நினைத்த என் மனதை
தேற்றிக்கொள்ள
முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறது...
இவ்வாறு கவிதை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.