'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் காடன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. கடந்த ஆண்டிலேயே வெளியாக வேண்டிய இப்படம் லாக்டவுன் காரணமாக தாமதமாகி வந்த நிலையில், மார்ச் 26-ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு, இந்த படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். அதேசமயம் முன்பு யானைகளைக் கண்டு பயந்தேன். ஆனால் யானைகள் குழந்தை மாதிரி என்பது அவற்றுடன் பழகிய பிறகு தான் தெரிந்து கொண்டேன். அந்தவகையில் எனக்கு இப்போது யானைகள் மீது பயமில்லை. மனிதர்கள் மீதுதான் பயம் என்று சொன்னார் விஷ்ணு.
இந்த நிலையில் தற்போது ஒரு யானையின் மீது தான் கூலாக ஏறி அமர்ந்து விட்டு, இறங்கும் ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு. படப்பிடிப்பு தளத்தில் யானையுடன் பழகிய விதம் குறித்தும் அதில் பதிவிட்டுள்ளார்.




