தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

இசை அமைப்பாளர்கள் ஹீரோவாகும் காலம் இது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஆப் தமிழா ஆதி, உள்ளிட்ட சிலர் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் பாலாஜி விது தற்போது ஹீரோவாகியிருக்கிறார்.
இவர் தமிழில் இன்பா, சூரன், மஸ்து மஜா மாடி(கன்னடம்) உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து தமிழில் வெளியான த்ரிஷா இல்லைனா நயன்தாரா கன்னடா ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தற்போது கதையின் நாயகனாக தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.
இதுகுறித்து பாலாஜி விது கூறியதாவது: நான் நடிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், இந்த கதையை ரங்கா புவனேஷ்வர் என்னிடம் கூறினார். கதையை கேட்கும்போதே இந்தப்படத்தில் தான் அறிமுகம் ஆகணும் என முடிவு செய்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்து இதில் நடித்தேன். திரில்லரும் காதலும் நிறைந்த கதை இது. என்றார்.