காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பாகுபலி படத்தின் ரிலீசுக்கு பிறகு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று பிரபாஸ்-அனுஷ்கா ஆகிய இருவருமே தெரிவித்து அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதையடுத்து தனது உறவுக்கார பெண் ஒருவரை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி, அந்த செய்தியும் பின்னர் அடங்கிப் போனது. இந்தநிலையில் தற்போது ஒரு தொழிலதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக டோலிவுட்டில் ஒரு ஹாட் நியூஸ் வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியாவது உண்மையா? இல்லை இதுவும் வழக்கம்போல வதந்திதானா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தற்போது பிரபாஸ் ராதே ஷ்யாம், சலார், ஆதி புரூஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.




