ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராகிவிட்டார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அவர் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தையும் பிரம்மாண்டமாகவே உருவாக்கச் சொல்கிறார். அனைத்துப் படங்களும் ஹிந்தியிலும் வெளியாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.
தற்போது 'ராதே ஷ்யாம், சலார்' படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்க உள்ள 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. மும்பையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் ஒன்றில் அதற்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.
ராமாயணக் கதையாக உருவாகும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதையாக கிரித்தி சனோன், ராவணன் ஆக சைப் அலிகான் நடிக்கிறார்கள். பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. தமிழ், கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்ய உள்ளார்கள்.