‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
2000ம் ஆண்டு காதல் ரோஜாவே படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா குமார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தவர், சிறிய இடைவெளிக்குப் பின்னர் கமலின் விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து அவர் மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 20 வருடங்களாக பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் பூஜா குமார், மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டம் பெற்றவர்.
தொழிலதிபர் விஷால் ஜோஷி என்பவருடன் பூஜா குமார் வாழ்ந்து வருவதாக நீண்டகாலமாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் இது பற்றி பூஜா குமாரோ அல்லது விஷால் ஜோஷியோ வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விஷால் ஜோஷி தனது சமூகவலைதளப் பக்கத்தில் நடிகை பூஜாகுமாரோடு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அந்தக் குழந்தைக்கு நாவ்யா எனப் பெயரிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
பூஜா குமாரின் இந்த ரகசிய திருமணம் மற்றும் குழந்தை பற்றிய தகவல்களால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா, இதுப்பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் உள்ளார்.