ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' | பின்னணி பாடகர் வேல்முருகன் கைது |
2000ம் ஆண்டு காதல் ரோஜாவே படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா குமார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தவர், சிறிய இடைவெளிக்குப் பின்னர் கமலின் விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து அவர் மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 20 வருடங்களாக பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் பூஜா குமார், மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டம் பெற்றவர்.
தொழிலதிபர் விஷால் ஜோஷி என்பவருடன் பூஜா குமார் வாழ்ந்து வருவதாக நீண்டகாலமாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் இது பற்றி பூஜா குமாரோ அல்லது விஷால் ஜோஷியோ வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விஷால் ஜோஷி தனது சமூகவலைதளப் பக்கத்தில் நடிகை பூஜாகுமாரோடு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அந்தக் குழந்தைக்கு நாவ்யா எனப் பெயரிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
பூஜா குமாரின் இந்த ரகசிய திருமணம் மற்றும் குழந்தை பற்றிய தகவல்களால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா, இதுப்பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் உள்ளார்.