ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த படம் வருகிற 21-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் தான் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ஒரு சாதாரண விவசாயி மகளாக நான் நடித்திருக்கிறேன். எனக்கு கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டு, பின்னர் பல எதிப்புகளை மீறி எப்படி இந்திய அளவிலான கிரிக்கெட் அணியில் இணைகிறேன் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதில் சத்யராஜ் எனது அப்பாவாக நடித்துள்ளார். முருகேசன் என்ற விவசாயி வேடத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நானும் அவரது நிஜ மகளாகவே வாழ்ந்திருக்கிறேன். காரணம், எனது அப்பா நான் 10 வயதாக இருந்தபோதே இறந்து விட்டார். அதனால் சத்யராஜ் என்னை ஒரு நிஜ மகளாகவே நினைத்து நடித்த நடிப்பு என்னை நெகிழ வைத்தது. அந்த வகையில், இந்த படத்தில் நடித்த பிறகும் அவரை எனது அப்பா ஸ்தானத்தில் வைத்தே பார்த்து வருகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.