ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், குடிபோதையில் காரை ஓட்டி வந்ததால், அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ரூ.3500 அபாராதம் விதித்தனர். ஆனால் இந்த செய்திரை காயத்ரி ரகுராம் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : எதையோ மறைக்க, நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும், பத்திரிகையும் பலமாக இருக்கலாம், ஆனால் என் ஆன்மாவையும், வாழ்வையையும் விட எதுவும் பலமானது இல்லை.
என் படப்பிடிப்பை முடித்துவிட்டு வழியில் சக நடிகர்களை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமான வாகன சோதனைக்காக போலீசார் என்னை நிறுத்தினார்கள். அங்கு வாக்குவாதம் எதுவும் நடக்கவில்லை. எனது லைசன்ஸ் உள்ளிட்ட மற்ற ஆவணங்கள் வேறு பையில் இருந்ததால் அதை போலீசிடம் காண்பிக்க முடியவில்லை. நானே தான் எனது காரை ஓட்டி சென்றேன். போதையில் இருந்தால் எப்படி போலீசார் என்னை காரை ஓட்ட அனுமதிப்பார்கள். என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் கவலையில்லை என பதிவிட்டுள்ளார்.