ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'சர்கார்' படம் 250 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக சிலர் தகவலைப் பரப்பி வருகிறார்கள். அது உலகம் முழுவதும் வசூலித்த தொகையாம்.
உண்மையில் படம் 150 கோடி வசூலைத் தொட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள். இப்படம் தமிழ் நாட்டில் சில ஏரியாக்களில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாம். சில ஏரியாக்களில் பத்து சதவீதம் வரை நஷ்டம் வரும் என்கிறார்கள்.
இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமை சுமார் 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல். இதுவரை பங்குத் தொகையாக 70 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாம். இன்றும் நாளையும் மட்டும்தான் இப்படத்தின் கடைசி முக்கிய வசூல். அதன்பின் படம் வசூல் செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள்.
நவம்பர் 29ம் தேதியன்று சர்கார் ஓடிய பல தியேட்டர்களில் '2.0' படத்தைத் திரையிட உள்ளார்கள். அதனால், அதற்கு மேல் வசூல் இருக்க வாய்ப்பில்லை.