ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாயா, மாநகரம் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோ, அடுத்து தயாரிக்கும் படம் மான்ஸ்டர். ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன், நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியதாவது :
இப்படம் ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கான படமாக இருக்கும். எனது முந்தைய படமான 'ஒரு நாள் கூத்து' படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.
ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் ஒரு நடந்த சம்பவம் இந்த கதை உருவாக காரணமாக இருந்தது. கதையை எழுதி முடித்து இதையும் கூறினேன். அவர்களுக்கு இந்தக் கதை பிடித்துப்போனது. அதுவே இப்போது படமாகி வருகிறது.
குழந்தைகளை கவரும் எளிமையான நாயகன் தேவைப்பட்டார். அது எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் ஈர்த்துள்ளார்.
நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார். கருணாகரன் 'ஒரு நாள் கூத்து' படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும். என்றார்.