ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகத்தில் மணிரத்னம் என்று சொன்னாலே ஒரு பிரமிப்பு இருக்கும். அந்த அளவிற்கு பல மாறுபட்ட படங்களைக் கொடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக அவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள், ரசிகர்களுக்கு முழு திருப்தியைத் தரவில்லை. கடந்த வாரம் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்' படம் அந்தக் குறையைப் போக்கிவிட்டது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, படத்தைப் பார்த்து பயங்கரமாகவே பாராட்டித் தள்ளியிருக்கிறார். “செக்கச் சிவந்த வானம், பிரமாதமான நடிப்பு, ஏஆர் ரகுமான் ஈடு இணையேயில்லை. சந்தோஷ் சிவன் உண்மையாகவே கிளாஸ். மணிரத்தினத்தின் ரசிகனாக, சென்னை தியேட்டர்களில் அவருடைய படங்களைப் பார்த்து கைதட்டியவன், எனது வீட்டு ஹோம் தியேட்டரில் அதையே செய்தேன்.
படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் போய் உடனே உங்களது டிக்கெட்டை வாங்குங்கள். ஒரு கிளாசிக் படத்திற்கு சான்றாக இருப்போம். இந்த பத்தாண்டின் சிறந்த படம். மாஸ்டர் எப்படி திரும்பி வந்திருக்கிறார் தெரியுமா,” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் மகேஷ் பாபு.