ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதரி, டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்து இன்று வெளிவந்துள்ள படம் 'செக்கச் சிவந்த வானம்'. மனிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் தோல்வியடைந்ததால் அவருடைய அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
அடுத்த படம் மல்டி ஸ்டார் படம் என்றதும் அது இன்னும் அதிகமானது. முதல் முறையாக அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என நாயகர்களும், மற்ற நாயகிகளும் முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதால் இது என்ன மாதிரியான படமாக இருக்கும் எனப் பலரும் ஜோசியம் சொன்னார்கள். இது தொழிலாளர்களைப் பற்றிய கதை, மக்கள் பிரச்சினையைப் பேசும் படம் என்றெல்லாம் அளந்துவிட்டார்கள். ஆனால், படம் வந்தபின் பார்த்தால் பக்கா கேங்ஸ்டர் படமாக இருக்கிறது.
இன்று அதிகாலை காட்சியாக பல தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இன்று பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்தின் இருக்கைகள் 98 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. அடுத்த நான்கு நாட்களுக்கு அதே நிலைமை நீடிப்பதால் படத்திற்கான வரவேற்பு முன்பின் இருந்தாலும் படம் தப்பித்துவிடும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வியாபார ரீதியாக இந்த 'வானம்' பச்சையாக மாறும் என்கிறார்கள்.