ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1980களில் கனவு கன்னியாக இருந்தவர் ஜெயப்பிரதா. தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் பின்னாளில் பாலிவுட்டிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். சில காலம் அரசியலிலும் சாதித்த ஜெயப்பிரதா, தற்போது அடுத்த அவதாராமாக சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். ஹிந்தி முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பெர்பெக்ட்பதி என்ற தொடரில் நடிக்கிறார், இதுபற்றி அவர் கூறியதாவது
பல ஆண்டுகளாகவே என்னை சீரியலில் நடிக்க அழைத்தார்கள். நான்தான் மறுத்து வந்தேன். பெர்பெக்ட்பதியின் கதையும் கேரக்டரும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் நான் மாமியாராக நடிக்கிறேன். இது சீரியல்களில் வரும் வழக்கமான மாமியார் கேரக்டர் இல்லை. முற்போக்கு சிந்தனையுள்ள மாமியாராக நடிக்கிறேன்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும். டி.வி தொடர்கள் தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது. நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.