ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 120 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வில்லனின் நண்பனாக கலையரசன் நடிக்கிறார். இப்போது ரஜினியின் நண்பனாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறார் ரஜினி. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் வருகிற 20ந் தேதி முதல் நடக்கிறது. என்றாலும் படக்குழுவினர் அங்கேயே தங்கி உள்ளனர். ரஜினி 19ந் தேதி டார்ஜிலிங் கிளம்பி போகிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பஹத் பாசிலும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. படத்தில் பகத் பாசில் நடிப்பது பற்றி இன்னும் சில தினங்களில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது. பஹத் பாசில், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.