ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பாரதிராஜா தமிழ் பண்பாட்டு கலை இலக்கிய பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவல்லிக்கேணி போலீசில் பாரதிராஜா மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் நாராயணன் நேற்று புகார் அளித்தார். அவரின் புகர் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 12ம் தேதி கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அமீருக்கு ஆதரவாக நிருபர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேசத்திற்கு விரோதமாகவும், தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். எனவே பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த திருவல்லிக்கேணி போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி திருவல்லிக்கேணி போலீசார், 2 பிரிவுகளின் கீழ் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.