ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் ஏ.ஆர்.முருதாசிடம் உதவியாளராக இருந்து இயக்குனர் ஆனார். ரங்கூன் படத்தையும் ஏ.ஆர்.முருதாஸ் தான் தயாரித்தார்.
ராஜ்குமார் பெரியசாமி சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் டி.வி நடத்திய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியை இயக்கினார். அப்போது இண்டன்ஷிப் மாணவியாக வந்த ஜஸ்வினிக்கும் அவருக்கும் காதல் உருவானது. கடந்த 9 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தார்கள். ராஜ்குமார் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக சேர்ந்தார். ஜஸ்வினி கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பின்னர் இருவரும் இணைந்து ரங்கூன் படத்தில் பணியாற்றினார்கள். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 25ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.