ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உயர்திரு 420, துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், படங்களில் ஸ்டைலான வில்லியாக நடித்தவர் அக்ஷ்ரா கவுடா. மாயவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த அக்ஷ்ரா, தமிழில் அதிக வாய்ப்பு இல்லாமல் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் எம்.ஜி.ஆரின் வில்லியாக. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ் கேரக்டர்கள் அனிமேஷனில் உருவாகிறது. மற்ற கேரக்டர்கள் நேரடியாக நடிக்கிறார்கள்.
இதில் அக்ஷ்ரா கவுடா, கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் எம்.ஜி.ஆருக்கு அந்த நாட்டில் வாழும் வில்லியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் அனிமேஷன் காட்சிகளாகவும், நேரடி காட்சிகளாகவும் படத்தில் இடம் பெறுகிறது என தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.