ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் பிறந்து, வளர்ந்து படித்தவரான மகேஷ் பாபுவுக்கு தாய் மொழியான தெலுங்கில் மட்டும் நடித்தால் போதாது, பிறந்த வளர்ந்த ஊரின் மொழியிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை நம்பி 'ஸ்பைடர்' படத்தில் இறங்கினார். ஆனால், அதன் பின் மகேஷ்பாபுவுக்கு அப்படி ஒரு எண்ணமே வரக் கூடாத அளவிற்கு படு மோசமான ஒரு படத்தைக் கொடுத்துவிட்டார் முருகதாஸ்.
அந்தப் படத் தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருந்தார் மகேஷ்பாபு. அவர் அடுத்து நடித்துள்ள 'பரத் அனி நேனு' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது 'ஸ்பைடர்' படத்தின் தோல்வியைப் பற்றி ஏதாவது யோசித்தீர்களா என்று கேட்டதற்கு, 'அப்படியெல்லாம் செய்யும் பழக்கமில்லை' என்று பதிலளித்திருக்கிறார் மகேஷ் பாபு.
ஆசையாக வந்தவரை இப்படி ஒரேயாக ஓட வைத்துவிட்டாரே முருகதாஸ். இனி, தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆசையே மகேஷ் பாபுவுக்கு போய்விட்டிருக்குமே....!