ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அருவி படம் மூலம் தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி பாலன். இந்த படத்திற்கு மட்டும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இருப்பினும் அவர் இன்னும் அடுத்தப்படத்தில் கமிட்டாகவில்லை.
இரண்டாவது படம் ஏன் இவ்வளவு தாமதம் என்று அதிதியிடம் கேட்டால், அவர் கூறியதாவது... "ஒரு சில கதைகள் கேட்டேன், இரண்டாவது படம் நான் நினைத்த மாதிரி கதை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை.
கதை தான் முக்கியம். அப்பா, அம்மா மற்றும் சில நட்புகளுடன் கதைகள் கேட்கிறேன். எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக கதைகள் பிடிக்க வேண்டும். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது அதை பயன்படுத்தி கொள்வேன். அநேகமாக இன்னும் ஒரு மாதத்தில் என் இரண்டாவது படத்தை முடிவு செய்வேன் என்கிறார்.