தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' |

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். காடுகளை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வருகிறது.
முதலில் கும்பா என்ற கேரக்டரில் பிரித்விராஜ் நடிப்பதாக அறிவித்து அவரின் முதல் பார்வையை வெளியிட்டனர். தொடர்ந்து படத்தின் முன்னோட்ட பாடலாக ' குளோப் ட்ராட்டர்'-ஐ வெளியிட்டனர். இதை ஸ்ருதிஹாசன் பாடியிருந்தார். நாளைமறுதினம் நவ., 15ல் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை பிரமாண்டமான விழா வைத்து வெளியிடுகின்றனர். இதை ஓடிடியிலும் நேரலையில் ஒளிபரப்ப உள்ளனர்.
இந்நிலையில் நாயகி பிரியங்கா சோப்ராவின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அவர் மந்தாகினி என்ற கேரக்டரில் நடிக்கிறார். மலைகளுக்கு நடுவே அதிரடி ஆக் ஷன் காட்சியில் அவர் நடித்திருப்பது போன்று போஸ்ரை வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஊமை ராணியின் பெயர் இது. மேலும் ராமாயணத்தில் சொல்லப்பட்ட ஒரு நதியின் பெயரும் கூட இது.




