ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய படங்கள், அல்லது பிரம்மாண்டத் திரைப்படங்கள் வெளியாகும் போது, டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா அரசுகள் வழக்கமாக வைத்திருக்கின்றன.
சமீபத்தில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'ஓஜி' படம் வெளிவந்த போதும் அப்படியான டிக்கெட் கட்டண உயர்வு தெலுங்கானா மாநிலத்திலும், ஒரு வாரத்திற்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் திரையுலகில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இனி, தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் இப்படியான கட்டண உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய ஹீரோக்கள் என்னிடம் டிக்கெட் விலை உயர்வு கோரி வருகின்றனர். அதிகரித்த வருவாயில் சில சதவீதத்தை திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் அவர்களிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிக வருவாய் பெறுகின்றனர், ஆனால் தொழிலாளர்களுக்கு அது பயன்படவில்லை. இனிமேல், எந்தப் படத்திற்கும் டிக்கெட் உயர்வு, அரசாணை தேவைப்பட்டால், சம்பாதித்த கூடுதல் வருமானத்தில் 20 சதவீதம் திரைப்படத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும்,” என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார்.