ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படம் ரூ 100 கோடியை எட்டியுள்ளது. அடுத்து என்ன படங்களில் நடிக்கிறார் என்று விசாரித்தால், இப்போது விக்னேஷ்சிவன் இயக்கும் 'எல்ஐகே' படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் 18ல் அந்த படம் ரிலீஸ். அதற்கடுத்து, ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பல ஆண்டுகளாக அவரின் உதவி இயக்குனராக இருந்த ஒருவரே அந்த படத்தை இயக்குகிறார்.
அதற்கடுத்து பெரிய பட்ஜெட்டில், ஒரு பக்கா ஆக்ஷன் கதையில் நடிக்கப்போகிறார். 'டிராகன்' பெரிய வெற்றி பெற்றநிலையில், மீண்டும் அஸ்வத் மாரிமுத்து உடன் இணையவும் வாய்ப்புள்ளது. 'லவ் டுடே, டிராகன், டியூட்' என வரிசையாக மூன்று படங்களும் 100 கோடி வசூலை தாண்டி ஹிட் அடித்துள்ளதால், இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிரதீப் ரங்கநாதன் கால்ஷீட் பிஸி.
டியூட் படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளதால், பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட், சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளதாம். பிரதீப் ரங்கநாதனால் அதிகம் லாபம் சம்பாதித்தது ஏஜிஎஸ் நிறுவனம்தான். அவரின் 'லவ்டுடே, டிராகன்' படங்களை தயாரித்து பல கோடி லாபம் ஈட்டியது. இப்போது டியூட் படத்தின் தமிழக உரிமையையும் அவர்களே பெற்று இருக்கிறார்கள். இதனால், சில கோடி லாபம். அடுத்தும் அவரை வைத்து படம் தயாரிக்கப்போகிறார்கள். அதிலும் டேபிள் பிராபிட் கிடைக்க வாய்ப்பு என்கிறார்கள் கோலிவுட்டில்.




