'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

தெலுங்குத் திரையுலகத்தில் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த மூன்று வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வந்தது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, படப்பிடிப்புகளை நிறுத்தினர். கூட்டமைப்பும், திரைப்பட வர்த்தக சபையும் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தெலுங்கானா, ஆந்திர மாநில அமைச்சர்களையும் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார்கள். கடந்த சில நாட்களாக நடிகர் சிரஞ்சீவி இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பிலும் பேசி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்து இன்று முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க சம்மதித்துள்ளார்கள்.
30 சதவீத ஊதிய உயர்வு கோரிய நிலையில் 22.5 சதவீத ஊதிய உர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் 15 சதவீதம், இரண்டாம் ஆண்டில் 2.5 சதவீதம், மூன்றாம் ஆண்டில் 5 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்வு வழங்கப்படும்.
பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இரு தரப்பினரும் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.




