இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஒரு படம் ரிலீஸ் ஆன சில நாட்களில் சக்சஸ் மீட் அல்லது நன்றி அறிவிப்பு விழா நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஒருபடி மேலேபோய் படம் ரிலீஸ் ஆன அன்றே நடத்திவிடுகிறார்கள், ஹரி ஹர வீரமல்லு, கிங்டம் படத்துக்கு அப்படி நடந்தது. இப்போது உண்மையிலே வெற்றி பெற்று இருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி. 75 கோடிவரை வசூலித்துள்ளது. பின்னே ஏன் சக்சஸ் மீட் நடத்தவில்லை. விஜய்சேதுபதி மீது பாலியல் புகார் வந்ததால், அது குறித்து யாராவது கேள்வி எழுப்புவார்கள், மீடியாவில் சர்ச்சை ஆக, இந்த சந்தோஷமான நேரத்தில் இமேஜ் டேமேஜ் ஆகும் என விஜய்சேதுபதி தயங்குகிறாரா என விசாரித்தால், அதுவும் ஒருவகை காரணம்.
ஆனாலும் 100 கோடி வந்தபின் சக்சஸ் மீட் வைக்கலாம் என படக்குழு நினைக்கிறது. ஒருவேளை விஜய்சேதுபதி நேரம் ஒதுக்கினால் இந்த வாரம் அந்த நிகழ்ச்சியை நடத்தலாம். மகாராஜா படத்துக்கு இப்படியொரு சக்சஸ்மீட்டை நடத்தினார் விஜயசேதுபதி. ஆனால், தலைவன் தலைவியில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருப்பதால் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இருக்கிறது. விஜய் சேதுபதியும் புரிஜெகன்நாத் இயக்கும் படத்தில் பிஸி. ஆகவே சக்சஸ் மீட் பணிகள் தள்ளிப்போகிறது. எப்படியும் நடத்தியே ஆக வேண்டும் என்று படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் உறுதியாக இருக்கிறதாம்.