ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த நாட்களில் மீடியாக்களுக்கு சரியான தீனியாக சில நிகழ்வுகள் நடந்தன. முதலில் 'கூலி' படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் ஹிந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வழக்கம் போல ரஜினிகாந்தின் மேடைப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடிகர் அஜித் திரையுலகில் நுழைந்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இடம் பெற்ற சில வரிகள் சிலரை மறைமுகமாகக் குறிப்பிட்டதாகவே மீடியாக்களும், ரசிகர்களும் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
நடிகர் சூர்யா குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களாக அவர்களது அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவி செய்ததை நேற்று விழாவாகக் கொண்டாடினார்கள். அதில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் பக்கம் போனாலும், யு டியூப் தளங்கள் பக்கம் போனாலும் ரஜினி, கமல், அஜித், சூர்யா என செய்திகள் நிறைந்து காணப்படுகிறது.




