பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தென்னிந்திய சினிமாவின் ஷோமேன் என்று பாராட்டப்பட்டு வந்த இயக்குனர் ஷங்கர், ‛இந்தியன்- 2 , கேம் சேஞ்சர்' படங்களின் தோல்வியால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் சு.வெங்கடேசன் எழுதிய ‛வேள்பாரி' நாவலை அடுத்து படமாக்கப் போவதாகவும், அது தனது கனவு படம் என்றும் அறிவித்தார் ஷங்கர். அதோடு, வேள்பாரியை ஜேம்ஸ் கேமரூனின் ‛அவதார்' போன்ற உலகளாவிய படங்களுடன் ஒப்பிட்டார். அதோடு, ‛கேம் ஆப் த்ரோன்சை' விட பிரமாதமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு, இயக்குனர் ஷங்கர் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை செய்வதற்கு பதிலாக வலுவான படங்களை கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.