இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதாக அடிக்கடி மோசடி புகார் வரும், இதுகுறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் அடிக்கடி எச்சரிக்கை செய்யும். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையும், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அக்ஷரா ஹாசன் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இப்ராகிம் அக்தர் என்ற நபர் என்னுடைய பெயர் மற்றும் என் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, ஊட்டி பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும், எங்களது பெயரை பயன்படுத்தி, நாங்கள் சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். அவர் கூறும் அனைத்தும் தவறானவை. எங்களுக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தயவுசெய்து எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த நபருடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.




