வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா. அதேபோல், நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது 100வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக எழுந்து வந்த நிலையில், தற்போது தமிழ் இயக்குனர் ஒருவர் பட்டியலில் முந்தியுள்ளார். அசோக் செல்வன் நடித்த 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா.கார்த்தி இயக்கத்தில் நாகார்ஜூனாவின் 100வது படம் உருவாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, தனுஷ், சூர்யா, கார்த்தி என தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் சூழலில், தெலுங்கு நடிகர், தனது 100வது படத்திற்கு தமிழ் இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.